Monday, May 18, 2009
ஏனடி இந்த அவலம்???
யாருமற்ற தனிமை எனக்கு கற்று தந்தது,
மரணத்தின் வழிகள் மட்டுமே.
மனவலி மறக்க நான் உண்டாக்கிய காயங்கள்,
இதயத்திற்கு தந்தது இனிமை மட்டுமே.
பூட்டிய அனைத்து வாயில்களையும் தட்டி பார்த்தேன்,
எனக்காக திறந்தது மரண வாயில் மட்டுமே.
வாழ்கையின் வெறுமையை உணர்ந்த எனக்கு,
இறுதி முடிவு மரணம் மட்டுமே.
இனிய தமிழில் உன் இதய குமுறல்களை,
என்றோ நீ எழுதினாய் தவறில்லை.
தனிமையில் தோன்றிய எண்ணங்களை உனக்காகவே,
உயிர் வாழும் சொந்தமாய் நான் வந்தபிறகும்,
மறக்க மறுக்கிறாயே என்னவளே.
ஏனடி இந்த அவலம் ???
(நீ உன்னுயிர் இழக்க துடிக்கும் ஒவ்வொரு நொடியும் என்னுயிரும் சேர்ந்தல்லவா சாகிறது).
- செல்வகுமார்இனியன்!!!
Subscribe to:
Post Comments (Atom)
Really Nice One da........
ReplyDelete